பிராமணரல்லாதோரும் - பிராமணர்களும் - சில பதில்கள்
கருணாநிதியின் கூற்று......
கருணாநிதி தவறாக எதுவும் கூறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுகாசினி பேசிய அநாகரீகப் பேச்சை முதலிலே கண்டித்திருக்க வேண்டும்.
சுகாசினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஞாநி சொல்கிறார் - "உங்கள் தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா என பாருங்கள் - இல்லை அல்லவா? பின் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டியது தானே?" என்கிறார்.
ஒரு LKG குழந்தை கூட தன் வாதங்களை இந்தக் காலத்தில் சற்று திறம்பட வைக்கும்.
அது சரி, ஞாநி கூறிய கூற்றின் உட்பொருள் என்ன?
ஒரு காலத்தில் - உங்களையெல்லாம் கொம்பு முளைத்த அரக்கர்களாகத் தான் சித்தரித்து வைத்திருந்தோம். ஆழ்மனதில் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த ஆபாசத்தை அறிந்தோ - அறியாமலோ பேசிவிட்டார் என்று ஞாநி ஒப்புக் கொள்கிறார்.
இதைத் தான் கலைஞர் சொன்னார் -
இந்த தர்க்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற பாதையில் திரும்புகிறது என்ற தனது கருத்தை வெளியிட்டார். இதில் என்ன தவறு கண்டீர்கள்? ஒரு வலைப்பூவைப் போட்டுக் கொண்டு கருத்து சொல்லவும் எழுதவும் உங்களுக்கும், நமக்கும் உரிமை இருக்கும் பொழுது அவருக்கும் உரிமை இருக்குமல்லவா?
அதற்காக கலைஞர் மீது வரிந்து கொண்டு பாய்வது தவறு.
பிராமண எதிர்ப்பு அரசியல் எடுபடாது - அப்படி எடுத்தால் தோற்றுப் போவீர்கள் என்கிறீர்கள். ஒருவேளை அவர் பிஜேபி போடும் தூண்டில்களுக்கு இசைந்திருந்தால் - அவருடைய பிராமண ஆதரவு அரசியலை ஆதரித்து இருப்பீர்கள் அல்லது மௌனமாக இருந்திருப்பீர்கள். அரசியல் களத்தில் ஓட்டுகளுக்காக மட்டுமே இடம் மாறிக் கொள்வதைப் பற்றி இன்று மக்கள் எந்தக் கவலையும் படவில்லை. அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விட, எங்கிருந்தாலும் எந்த அளவிற்கு தங்கள் இனத்திற்கு பயன் தரும் வகையில் கட்சிகள் இயங்குகின்றன என்று தான் மக்கள் பார்ப்பார்கள்.
மருத்துவர் ராமதாசின் கட்சி சாதியக் கட்சி.
இருக்கட்டும்.
அவர் அவர் சார்ந்த சாதிக்காகப் பாடுபட்டு, வெற்றியும் பெற்று, இன்று தன் தளங்களை விரிவுபடுத்தி மற்ற மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவில் இயங்குகிறார். ஆனால், பிஜேபி என்ன செய்தது? பிராமணர் கட்சி தானே? நாட்டில் நிலவி வந்த அமைதியான சூழலை குழி தோண்டி புதைத்தது. எங்கும் கொலைவெறித் தாண்டவமாடியது. அது மட்டும் சாதிக் கட்சி இல்லையா? பால் தாக்கரே சாதிக்கட்சி நடத்த வில்லையா? இவர்கள் எல்லோரும் புனிதத்தில் தங்கள் கட்சியை நீராட்டுகிறார்களா? ஆட்சியைப் பிடிக்கத்தானே இவர்கள் அரசியல் கட்சி நடத்துகிறார்கள்? - சாதியத்தை முன் வைத்து.?
பாமக - தங்கள் இலக்கில் தேசிய சாதிக்கட்சிகளை விட தெளிவாகவே இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதை விட, அதிக பட்ச சலுகைகளைப் பெறுவதிலே தான் அவர்கள் இலக்கு இருக்கிறது. ஒரு சமூகம் தான் அடைய வேண்டிய பயன்களைப் பெற போராடுவதில் தவறில்லை.
பாமக கட்சி அரசை நோக்கித் தான் போராட்டத்தைத் துவங்கியது. பிராமணர்களை நோக்கி அல்ல. பிராமணர்கள் வெறும் விமர்சகர்களாக இருந்து கொண்டு, அங்கும் இங்கும் பகை தூண்டி குளிர் காயும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமற்ற சூழ்நிலை நிலவி வந்த பொழுது தான், ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.
Blood is thicker than water என்பார்கள். அதன் வாழும் உதாரணம் - ஜெ. மீண்டும் பிராமணர்கள் துளிர்விட ஆரம்பித்தார்கள். அவர்கள் துளிர்விடும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் துளிர் விடத்தான் செய்கின்றன. என்றாலும் அவற்றைக் காட்டி போராட வேண்டிய அவசியமில்லாது போய் விட்டது - காரணம் - இங்கு ஒவ்வொருவரும் தங்கள் இருப்பை - பிற சாதிகளின் இருப்புடன் ஒப்பீடு செய்து, அதை சமன் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். பிராமண எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது - ஊதிவிட தேவையேற்படாமல்.
இந்த சாதியக் கட்சிகள் தங்கள் பலத்தை மற்றவர்களுடன் சமன் செய்யும் முயற்சியில் இறங்கிய பொழுது நிகழ்ந்தவை தான் வன்னிய-தலித் மோதல்கள் - வடக்கே. முக்குலத்தோர் - தலித் மோதல்கள் தெற்கே. கிட்டத்தட்ட இப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் பலத்தின் - வலிமையின் தன்மையை உணர்ந்த பின்பு - இப்பொழுது அவற்றைக் கொண்டு மேலும் தங்கள் மக்களுக்கு என்ன பயன்கள் கிட்டச் செய்யலாம் என்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்ற ஆயுதத்தை விட தங்களுக்கு என்ன பயன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற பேரத்தில் தான் கவனமிருக்கிறது.
இதனாலேயே அவர்கள் கூட்டணி மாறிக் கொள்ள கூட தயங்கவில்லை. ஒரு தனிப்பட்ட தலைவர் தான் ஒரு கொள்கையாளன் என்ற பட்டம் பெறுவதை விட, தான் சார்ந்த மக்கள் பயன் பெற வழி வகை என்ன என ஆரம்பித்து அதை செயல்படுத்துவது தான் முக்கியம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சமீப காலங்களில், சிறந்த தலைவராக பாராட்ட வேண்டுமென்றால் - அது ராமதாசாகத்தான் இருக்கவேண்டும். பாருங்கள் - இஸ்லாமியர்கள் கூட இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டு ஜெ. விடம் பேசுகிறார்கள் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் - அடுத்த தேர்தலில் உங்களுக்கே ஓட்டு போடுகிறோம் என்று. காலம் தாழ்ந்த அரசியல் விழிப்பு என்றாலும், இப்பொழுதாவது வந்ததே என்பது தான் முக்கியம். அது போல திருமா கூட ஜெ.வின் பக்கம் போக வாய்ப்பிருக்கிறது - அவர் சார்ந்த மக்களுக்கு, சிறந்த பயன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்.
இப்படியான இயங்கு தளத்தில் - பிராமண எதிர்ப்பை எல்லோரும் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஈனஸ்வரத்தில் முழங்கும் பிராமணர்களை விட மற்றவை அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் ஜெ., பிஜேபி போன்றவர்களின் வரவு, சங்கராச்சாரியார் போன்ற கறை படிந்த துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட - அரசியல் நிர்ணயச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் - இவை மீண்டும் மக்களை விழிப்படையச் செய்து விட்டது.
சங்கராச்சரியாருக்கு ஆதரவாக மக்கள் எங்குமே கொதித்து எழவில்லை என்பதே பிராமண எதிர்ப்பு எத்தகைய வலுவான நிலையிலிருக்கிறது என்பதை உணர்த்தும்.
1950 களில் எடுபட்டது இன்றும் எடுபடும். ஏனென்றால் இந்தப் போராட்டம் - வெறும் 1950களில் தொடங்கப் படவில்லை... அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது.
என்று பலகோடி மக்களை இழிவுபடுத்தும் வகையாக அவர்கள் பேசும் மொழியை இழித்தும் பழித்தும் பேசினார்களோ - பேசுகிறார்களோ - பேசுவார்களோ - அதுவரையிலும் பிராமண எதிர்ப்பு என்பதே கனன்று எரியத்தான் செய்யும்.
இந்த எதிர்ப்பை, தர்க்கத்தை - ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் எதிர்ப்பாக மட்டுமல்ல - தங்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் களைந்தெடுக்கவும், பகுத்தறிவு வழியில் மேலும் விரைந்து செல்லவும், பெண்களின் உண்மையான விடுதலைக்காக போராடுவதற்காகவும் இந்த எதிர்ப்பு உணர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சங்கராச்சாரியார் இந்த பிராமண எதிர்ப்பை ஊதிப் பெரிதாக்கி கொழுந்து விட்டெரியச் செய்தார் என்றால், சுகாசினி அதில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இன்னும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முன்னே செல்லுமே தவிர இதில் பின்னடைவு வருவதற்கு சாத்தியதை இல்லை.
என்றாலும், இந்தப் போராட்டங்கள் - நாகரீகமாக நடத்தப்பட வேண்டும். இதில் பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தும் தலைவர்கள் வெற்றி பெற்றால், தமிழ் உணர்வாளர்கள் எதிர்பார்க்கும் - ஆலயங்களில் தமிழ் உட்பட பல எதிர்பார்ப்புகளும் எளிதாக நிறைவேறிவிடும்.
கருணாநிதி தவறாக எதுவும் கூறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுகாசினி பேசிய அநாகரீகப் பேச்சை முதலிலே கண்டித்திருக்க வேண்டும்.
சுகாசினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஞாநி சொல்கிறார் - "உங்கள் தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா என பாருங்கள் - இல்லை அல்லவா? பின் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டியது தானே?" என்கிறார்.
ஒரு LKG குழந்தை கூட தன் வாதங்களை இந்தக் காலத்தில் சற்று திறம்பட வைக்கும்.
அது சரி, ஞாநி கூறிய கூற்றின் உட்பொருள் என்ன?
ஒரு காலத்தில் - உங்களையெல்லாம் கொம்பு முளைத்த அரக்கர்களாகத் தான் சித்தரித்து வைத்திருந்தோம். ஆழ்மனதில் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த ஆபாசத்தை அறிந்தோ - அறியாமலோ பேசிவிட்டார் என்று ஞாநி ஒப்புக் கொள்கிறார்.
இதைத் தான் கலைஞர் சொன்னார் -
இந்த தர்க்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற பாதையில் திரும்புகிறது என்ற தனது கருத்தை வெளியிட்டார். இதில் என்ன தவறு கண்டீர்கள்? ஒரு வலைப்பூவைப் போட்டுக் கொண்டு கருத்து சொல்லவும் எழுதவும் உங்களுக்கும், நமக்கும் உரிமை இருக்கும் பொழுது அவருக்கும் உரிமை இருக்குமல்லவா?
அதற்காக கலைஞர் மீது வரிந்து கொண்டு பாய்வது தவறு.
பிராமண எதிர்ப்பு அரசியல் எடுபடாது - அப்படி எடுத்தால் தோற்றுப் போவீர்கள் என்கிறீர்கள். ஒருவேளை அவர் பிஜேபி போடும் தூண்டில்களுக்கு இசைந்திருந்தால் - அவருடைய பிராமண ஆதரவு அரசியலை ஆதரித்து இருப்பீர்கள் அல்லது மௌனமாக இருந்திருப்பீர்கள். அரசியல் களத்தில் ஓட்டுகளுக்காக மட்டுமே இடம் மாறிக் கொள்வதைப் பற்றி இன்று மக்கள் எந்தக் கவலையும் படவில்லை. அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விட, எங்கிருந்தாலும் எந்த அளவிற்கு தங்கள் இனத்திற்கு பயன் தரும் வகையில் கட்சிகள் இயங்குகின்றன என்று தான் மக்கள் பார்ப்பார்கள்.
மருத்துவர் ராமதாசின் கட்சி சாதியக் கட்சி.
இருக்கட்டும்.
அவர் அவர் சார்ந்த சாதிக்காகப் பாடுபட்டு, வெற்றியும் பெற்று, இன்று தன் தளங்களை விரிவுபடுத்தி மற்ற மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவில் இயங்குகிறார். ஆனால், பிஜேபி என்ன செய்தது? பிராமணர் கட்சி தானே? நாட்டில் நிலவி வந்த அமைதியான சூழலை குழி தோண்டி புதைத்தது. எங்கும் கொலைவெறித் தாண்டவமாடியது. அது மட்டும் சாதிக் கட்சி இல்லையா? பால் தாக்கரே சாதிக்கட்சி நடத்த வில்லையா? இவர்கள் எல்லோரும் புனிதத்தில் தங்கள் கட்சியை நீராட்டுகிறார்களா? ஆட்சியைப் பிடிக்கத்தானே இவர்கள் அரசியல் கட்சி நடத்துகிறார்கள்? - சாதியத்தை முன் வைத்து.?
பாமக - தங்கள் இலக்கில் தேசிய சாதிக்கட்சிகளை விட தெளிவாகவே இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதை விட, அதிக பட்ச சலுகைகளைப் பெறுவதிலே தான் அவர்கள் இலக்கு இருக்கிறது. ஒரு சமூகம் தான் அடைய வேண்டிய பயன்களைப் பெற போராடுவதில் தவறில்லை.
பாமக கட்சி அரசை நோக்கித் தான் போராட்டத்தைத் துவங்கியது. பிராமணர்களை நோக்கி அல்ல. பிராமணர்கள் வெறும் விமர்சகர்களாக இருந்து கொண்டு, அங்கும் இங்கும் பகை தூண்டி குளிர் காயும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமற்ற சூழ்நிலை நிலவி வந்த பொழுது தான், ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.
Blood is thicker than water என்பார்கள். அதன் வாழும் உதாரணம் - ஜெ. மீண்டும் பிராமணர்கள் துளிர்விட ஆரம்பித்தார்கள். அவர்கள் துளிர்விடும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் துளிர் விடத்தான் செய்கின்றன. என்றாலும் அவற்றைக் காட்டி போராட வேண்டிய அவசியமில்லாது போய் விட்டது - காரணம் - இங்கு ஒவ்வொருவரும் தங்கள் இருப்பை - பிற சாதிகளின் இருப்புடன் ஒப்பீடு செய்து, அதை சமன் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். பிராமண எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது - ஊதிவிட தேவையேற்படாமல்.
இந்த சாதியக் கட்சிகள் தங்கள் பலத்தை மற்றவர்களுடன் சமன் செய்யும் முயற்சியில் இறங்கிய பொழுது நிகழ்ந்தவை தான் வன்னிய-தலித் மோதல்கள் - வடக்கே. முக்குலத்தோர் - தலித் மோதல்கள் தெற்கே. கிட்டத்தட்ட இப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் பலத்தின் - வலிமையின் தன்மையை உணர்ந்த பின்பு - இப்பொழுது அவற்றைக் கொண்டு மேலும் தங்கள் மக்களுக்கு என்ன பயன்கள் கிட்டச் செய்யலாம் என்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்ற ஆயுதத்தை விட தங்களுக்கு என்ன பயன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற பேரத்தில் தான் கவனமிருக்கிறது.
இதனாலேயே அவர்கள் கூட்டணி மாறிக் கொள்ள கூட தயங்கவில்லை. ஒரு தனிப்பட்ட தலைவர் தான் ஒரு கொள்கையாளன் என்ற பட்டம் பெறுவதை விட, தான் சார்ந்த மக்கள் பயன் பெற வழி வகை என்ன என ஆரம்பித்து அதை செயல்படுத்துவது தான் முக்கியம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சமீப காலங்களில், சிறந்த தலைவராக பாராட்ட வேண்டுமென்றால் - அது ராமதாசாகத்தான் இருக்கவேண்டும். பாருங்கள் - இஸ்லாமியர்கள் கூட இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டு ஜெ. விடம் பேசுகிறார்கள் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் - அடுத்த தேர்தலில் உங்களுக்கே ஓட்டு போடுகிறோம் என்று. காலம் தாழ்ந்த அரசியல் விழிப்பு என்றாலும், இப்பொழுதாவது வந்ததே என்பது தான் முக்கியம். அது போல திருமா கூட ஜெ.வின் பக்கம் போக வாய்ப்பிருக்கிறது - அவர் சார்ந்த மக்களுக்கு, சிறந்த பயன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்.
இப்படியான இயங்கு தளத்தில் - பிராமண எதிர்ப்பை எல்லோரும் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஈனஸ்வரத்தில் முழங்கும் பிராமணர்களை விட மற்றவை அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் ஜெ., பிஜேபி போன்றவர்களின் வரவு, சங்கராச்சாரியார் போன்ற கறை படிந்த துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட - அரசியல் நிர்ணயச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் - இவை மீண்டும் மக்களை விழிப்படையச் செய்து விட்டது.
சங்கராச்சரியாருக்கு ஆதரவாக மக்கள் எங்குமே கொதித்து எழவில்லை என்பதே பிராமண எதிர்ப்பு எத்தகைய வலுவான நிலையிலிருக்கிறது என்பதை உணர்த்தும்.
1950 களில் எடுபட்டது இன்றும் எடுபடும். ஏனென்றால் இந்தப் போராட்டம் - வெறும் 1950களில் தொடங்கப் படவில்லை... அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது.
என்று பலகோடி மக்களை இழிவுபடுத்தும் வகையாக அவர்கள் பேசும் மொழியை இழித்தும் பழித்தும் பேசினார்களோ - பேசுகிறார்களோ - பேசுவார்களோ - அதுவரையிலும் பிராமண எதிர்ப்பு என்பதே கனன்று எரியத்தான் செய்யும்.
இந்த எதிர்ப்பை, தர்க்கத்தை - ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் எதிர்ப்பாக மட்டுமல்ல - தங்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் களைந்தெடுக்கவும், பகுத்தறிவு வழியில் மேலும் விரைந்து செல்லவும், பெண்களின் உண்மையான விடுதலைக்காக போராடுவதற்காகவும் இந்த எதிர்ப்பு உணர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சங்கராச்சாரியார் இந்த பிராமண எதிர்ப்பை ஊதிப் பெரிதாக்கி கொழுந்து விட்டெரியச் செய்தார் என்றால், சுகாசினி அதில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இன்னும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முன்னே செல்லுமே தவிர இதில் பின்னடைவு வருவதற்கு சாத்தியதை இல்லை.
என்றாலும், இந்தப் போராட்டங்கள் - நாகரீகமாக நடத்தப்பட வேண்டும். இதில் பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தும் தலைவர்கள் வெற்றி பெற்றால், தமிழ் உணர்வாளர்கள் எதிர்பார்க்கும் - ஆலயங்களில் தமிழ் உட்பட பல எதிர்பார்ப்புகளும் எளிதாக நிறைவேறிவிடும்.