கருத்தடை - பெண்கள் சமாச்சாரமல்ல....
கருத்தடை - பெண்கள் சமாச்சாரமல்ல....
இந்த நவீன வாழ்க்கையில், கருத்தடை என்பது இன்றியமையாதது.
மதவாதிகள் இதை முழுமூச்சாக எதிர்த்தாலும், மக்கள் கருத்தடையின் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்.
கருத்தடையின் தேவைகள் -
ஏழை நாடுகளைப் பொறுத்தவரையிலும் - பொருளாதாரச் சிக்கல்கள் தான்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் மூலமே வாழ்க்கையை வளமாக்க முடியும் என்ற தேவைகள்.
இங்கு மதவாதிகளை மக்களே ஒதுக்கிவிட்டார்கள்.
அரசும் கருத்தடை குறித்த சட்டங்களை எளிதாக இயற்ற முடிகிறது. குறிப்பாக கருக்கலைப்பு சட்டங்கள்
மேலைநாட்டிலோ - இதற்கு நேர் எதிர்.
மக்கள் தொகை இல்லாததினால், பிற நாட்டு மக்கள் வளத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம். அதைத் தவிர்க்க மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம். அரசுகள் அதிக சலுகைகளை அறிவிக்கின்றனர்.
மக்களோ அதிக குழந்தைகளைத் தொல்லைகளாக நினைக்கின்றனர். ஏனென்றால் அவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர, அதிக உழைப்பு தேவைப்படுகிறது. என்ன தான் அரசுகள் பொருளாதார உதவிகள் செய்தாலும் - அவர்கள் அதிக பொறுப்புகளை சுமக்க தயங்குகிறார்கள்.
அதனால் அவர்களுக்கும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு பிரச்சினை எழத்தான் செய்கின்றன. இது மேல் நாட்டில் ஒரு பொதுவான சமூகப் பிரச்சினையாக இருந்தாலும், பெண்கள் இதை தங்கள் உரிமைகளுடன் முடிச்சுப் போட்டும் பார்க்கிறார்கள்.
கருத்தடை சாதனங்களும், கருக்கலைப்பும் இல்லையென்றால், அங்கும் கூட பெண்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பம் போல நண்பர்களுடனோ, அல்லது அலுவலக சக ஊழியர்களுடனோ, அல்லது one night standன்னு சொல்லப்படும் முற்றிலும் அந்நியன் ஒருவனுடனோ - உறவு கொள்ளும் தங்கள் தனி மனித விருப்பங்கள் பாதிக்கப்படும் என்றே அஞ்சுகின்றனர்.
கிறித்துவ தேவாலயங்களோ, கருக்கலைப்பை முற்றிலுமாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், பெண்கள் தங்கள் உரிமைகளை அடைவதில், தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்துவதில் சற்றும் கூட மதவாதிகளுக்கு விருப்பமில்லை.
இஸ்லாத்திலும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதிலே மதவாதிகள் தீவிரமாக இருக்கின்றனர். மக்கள் தொகை மிகுந்த இஸ்லாமிய சமூகங்கள் இப்பொழுது கருத்தடை சாதனங்களை ஏற்றுக் கொண்டு விட்டது. (ஆனாலும் கருக்கலைப்பு என்பது இன்னமும் ஏற்கப்படவில்லை)
ஆக, உலகம் முழுமைக்கும் இது ஒரு பிரச்சினையாகவே ஆகிவிட்டது.
கருத்தடை சாதனங்கள் இருவருக்குமே தயாரிக்கப்படுகின்றனவென்றாலும் - வேண்டாத கர்ப்பம் என்பது பொதுவாக பெண்களின் பிரச்சினையாக்கப்பட்டு விடுகிறது. அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே அதிக சிரத்தை எடுக்க வேண்டியதாகிறது. அரசும், பெண்களைக் குறி வைத்துத் தான் தன் பிரச்சார யுத்திகளை முன் வைக்கிறதேயன்றி, ஆண்களைக் குறி வைப்பதில்லை. ஒருவேளை, பிறக்கும் வழியையே அடைத்துவிட்டால், பிறகென்ன கவலை என்ற தாந்தோன்றித்தனமான முடிவாகக் கூட இருக்கலாம்.
அரசு எந்திரத்தின் மூலம் பெண்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஆண்களால் தானே எடுக்கப்படுகிறது?
இவர்கள் அரசு எந்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மிக எளிதாக அத்தனை சுமைகளையும் பெண்கள் மீது இறக்கி வைத்து விடுகிறார்கள்.
குடும்பம் என்ற நிறுவனத்தை நடத்திச் செல்வதுவும், அதன் (லாப)நட்டங்கள் அனைத்திற்கும் பொறுப்பாக்கப்படுவதுவும் பெண்கள் தானென்பதனால், அதிகக் குழந்தைகளைத் தவிர்க்கும் இந்தப் பொறுப்பையும் சுமக்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இது தங்கள் உரிமைப் பறிப்பாகத் தெரிவதில்லை.
உதாரணமாக, ஒரு பெண் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள் - தன் கணவனுடன். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பிரிய வேண்டி வருகிறது. பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் வளர்ப்பு உரிமையையும் இழக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? மறுமணம் செய்துகொள்ள (பெண்ணின் வயதையொத்து) ஆண்கள் தயாரானாலும் - கருத்தரிக்க இயலாத பெண்களை எந்த ஆண்கள் தங்கள் வம்சவிருத்திக்கான வழியாகப் பார்ப்பார்கள்? பெண்களுக்கு நிகழ்த்தப்படும் எத்தகைய கொடுமை இது? அவர்களின் வாழ்வின் உரிமையை பறிப்பதாகாதா? இத்தகைய கருத்தடை முறைகள்! பெண்களோ, ஆண்களோ நிரந்தரமான கருத்தடை என்பது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். சமீபத்தில் கும்பகோண தீவிபத்தில் தங்கள் குழந்தைகளை பறி கொடுத்த தாய்மார்களுக்கு மாற்று அறுவைசிகிச்சை கொடுத்ததிலிருந்தே தெரிகிறதே - பெண்களுக்கு எத்தனை பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது - இந்த கருத்தடை முறைகள்? (நூறு சதவிகித மாற்று வழியாக இதைக் காணமுடியாது என்பது மருத்துவர்களின் கூற்று.)
ஆண்களுக்குக் கவலையில்லை - அப்படியே போய் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நொடிப்பொழுதில் தொடங்கி விடலாம்.
இன்று நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் போதிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அரசு அதை தனக்கு வசதியாகக் கருதி, பொருளாதார நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு, பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மறைத்து, பிரச்சார யுத்திகளால் தொடர்ந்து பெண்களைத் தாக்கி தன் நோக்கை, இலக்கை அடையத் துடிக்கிறது.
இந்த சூழ்நிலையில், பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ நிரந்தர கருத்தடை செய்வதை மதவாதிகள் எதிர்ப்பது கூட சரியெனவே படுகிறது - அவர்கள் அறிந்தோ, அறியாமாலோ, செய்யக் கூடிய சரியான காரியமாக இருக்கிறது.
அரசு கவனம் செலுத்த வேண்டியது - நிரந்தர கருத்தடை முறைகளையும் அவற்றின் பிரச்சாரத்தையும் கைவிட்டுவிட்டு - தற்காலிக முறைகள், பின்விளைவுகளை ஏற்படுத்தாத மருந்து, மாத்திரை மற்றும் அவற்றிற்கான ஆராய்ச்சிகள், ஆணுறைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தி பிரச்சார முறைகளை அமைக்க வேண்டும்.
கருக்கலைப்பை முற்றிலுமாக பாதுகாப்பானதாக்கி, fly by night operatorகளைத் தடுத்து, முறைப்படுத்த வேண்டும். அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை வடிவமைக்க வேண்டும்.
கருத்தடையின் முழு பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்தும் ஆண்களின் மனோபாவத்தை மாற்றி, கருத்தடையில் பங்கேற்கச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.
இந்த கருத்தடை மற்றும் கருக்கலைப்பு முறைகளை வேறொரு தளத்திலும் விவாதிக்கப்பட வேண்டி வருகின்றது.
அது பாதுகாப்பான உடலுறவு....
குஷ்பு, சுகாசினி போன்றவர்களால் இன்று ஒழுக்ககேட்டை வலியுறுத்துவதற்கு இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்ற முக்காடு தேவைப்பட்டதை தமிழகம் கொதித்து எழுந்து தடுத்து விட்டதென்றாலும் - இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்பதை நாம் கம்பளத்தின் அடியில் தள்ளிப் புதைத்து விட முடியாது.
இன்று எய்ட்ஸ் பெருமளவில் தாக்கி இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதுவே போதுமானது - பாதுகாப்பான உடலுறவு தேவை என்பதை வலியுறுத்த. தன்னை மட்டும் பாதுகாக்க அல்ல, தன் பெண்ணை - மனைவியைப் பாதுகாக்கவும் தான்.
இந்தப் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆண்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்படி பொறுப்பேற்கையிலேயே அதுவும் கூட கருத்தடைக்கான வழிமுறையாக ஆகக்கூடும்.
இனியும் ஆண்கள் எல்லாவித பொறுப்புகளையும் பெண்கள் மீதே சுமத்தி விட்டு, விட்டேத்தியாக சுற்றிவரலாம் என்று நினைத்தால், பின்னர் அதுவே தங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்காக பெண்களைப் போராடத் தூண்டும் - அப்பொழுது பெண்கள் வைக்கும் கோரிக்கைகளில் நிரந்தர கருத்தடை எதிர்ப்பும் பாதுகாப்பான உடலுறவுத் தேவையும் அடக்கி இருக்கும்.
ஆண்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் - கருத்தடை, மற்றும் பாதுகாப்பான உடலுறவிற்கான உத்தரவாதத்திற்கு.
இந்த நவீன வாழ்க்கையில், கருத்தடை என்பது இன்றியமையாதது.
மதவாதிகள் இதை முழுமூச்சாக எதிர்த்தாலும், மக்கள் கருத்தடையின் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்.
கருத்தடையின் தேவைகள் -
ஏழை நாடுகளைப் பொறுத்தவரையிலும் - பொருளாதாரச் சிக்கல்கள் தான்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் மூலமே வாழ்க்கையை வளமாக்க முடியும் என்ற தேவைகள்.
இங்கு மதவாதிகளை மக்களே ஒதுக்கிவிட்டார்கள்.
அரசும் கருத்தடை குறித்த சட்டங்களை எளிதாக இயற்ற முடிகிறது. குறிப்பாக கருக்கலைப்பு சட்டங்கள்
மேலைநாட்டிலோ - இதற்கு நேர் எதிர்.
மக்கள் தொகை இல்லாததினால், பிற நாட்டு மக்கள் வளத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம். அதைத் தவிர்க்க மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம். அரசுகள் அதிக சலுகைகளை அறிவிக்கின்றனர்.
மக்களோ அதிக குழந்தைகளைத் தொல்லைகளாக நினைக்கின்றனர். ஏனென்றால் அவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர, அதிக உழைப்பு தேவைப்படுகிறது. என்ன தான் அரசுகள் பொருளாதார உதவிகள் செய்தாலும் - அவர்கள் அதிக பொறுப்புகளை சுமக்க தயங்குகிறார்கள்.
அதனால் அவர்களுக்கும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு பிரச்சினை எழத்தான் செய்கின்றன. இது மேல் நாட்டில் ஒரு பொதுவான சமூகப் பிரச்சினையாக இருந்தாலும், பெண்கள் இதை தங்கள் உரிமைகளுடன் முடிச்சுப் போட்டும் பார்க்கிறார்கள்.
கருத்தடை சாதனங்களும், கருக்கலைப்பும் இல்லையென்றால், அங்கும் கூட பெண்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பம் போல நண்பர்களுடனோ, அல்லது அலுவலக சக ஊழியர்களுடனோ, அல்லது one night standன்னு சொல்லப்படும் முற்றிலும் அந்நியன் ஒருவனுடனோ - உறவு கொள்ளும் தங்கள் தனி மனித விருப்பங்கள் பாதிக்கப்படும் என்றே அஞ்சுகின்றனர்.
கிறித்துவ தேவாலயங்களோ, கருக்கலைப்பை முற்றிலுமாக எதிர்க்கின்றனர். ஏனென்றால், பெண்கள் தங்கள் உரிமைகளை அடைவதில், தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்துவதில் சற்றும் கூட மதவாதிகளுக்கு விருப்பமில்லை.
இஸ்லாத்திலும் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதிலே மதவாதிகள் தீவிரமாக இருக்கின்றனர். மக்கள் தொகை மிகுந்த இஸ்லாமிய சமூகங்கள் இப்பொழுது கருத்தடை சாதனங்களை ஏற்றுக் கொண்டு விட்டது. (ஆனாலும் கருக்கலைப்பு என்பது இன்னமும் ஏற்கப்படவில்லை)
ஆக, உலகம் முழுமைக்கும் இது ஒரு பிரச்சினையாகவே ஆகிவிட்டது.
கருத்தடை சாதனங்கள் இருவருக்குமே தயாரிக்கப்படுகின்றனவென்றாலும் - வேண்டாத கர்ப்பம் என்பது பொதுவாக பெண்களின் பிரச்சினையாக்கப்பட்டு விடுகிறது. அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே அதிக சிரத்தை எடுக்க வேண்டியதாகிறது. அரசும், பெண்களைக் குறி வைத்துத் தான் தன் பிரச்சார யுத்திகளை முன் வைக்கிறதேயன்றி, ஆண்களைக் குறி வைப்பதில்லை. ஒருவேளை, பிறக்கும் வழியையே அடைத்துவிட்டால், பிறகென்ன கவலை என்ற தாந்தோன்றித்தனமான முடிவாகக் கூட இருக்கலாம்.
அரசு எந்திரத்தின் மூலம் பெண்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஆண்களால் தானே எடுக்கப்படுகிறது?
இவர்கள் அரசு எந்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மிக எளிதாக அத்தனை சுமைகளையும் பெண்கள் மீது இறக்கி வைத்து விடுகிறார்கள்.
குடும்பம் என்ற நிறுவனத்தை நடத்திச் செல்வதுவும், அதன் (லாப)நட்டங்கள் அனைத்திற்கும் பொறுப்பாக்கப்படுவதுவும் பெண்கள் தானென்பதனால், அதிகக் குழந்தைகளைத் தவிர்க்கும் இந்தப் பொறுப்பையும் சுமக்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இது தங்கள் உரிமைப் பறிப்பாகத் தெரிவதில்லை.
உதாரணமாக, ஒரு பெண் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறாள் - தன் கணவனுடன். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பிரிய வேண்டி வருகிறது. பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளின் வளர்ப்பு உரிமையையும் இழக்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? மறுமணம் செய்துகொள்ள (பெண்ணின் வயதையொத்து) ஆண்கள் தயாரானாலும் - கருத்தரிக்க இயலாத பெண்களை எந்த ஆண்கள் தங்கள் வம்சவிருத்திக்கான வழியாகப் பார்ப்பார்கள்? பெண்களுக்கு நிகழ்த்தப்படும் எத்தகைய கொடுமை இது? அவர்களின் வாழ்வின் உரிமையை பறிப்பதாகாதா? இத்தகைய கருத்தடை முறைகள்! பெண்களோ, ஆண்களோ நிரந்தரமான கருத்தடை என்பது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். சமீபத்தில் கும்பகோண தீவிபத்தில் தங்கள் குழந்தைகளை பறி கொடுத்த தாய்மார்களுக்கு மாற்று அறுவைசிகிச்சை கொடுத்ததிலிருந்தே தெரிகிறதே - பெண்களுக்கு எத்தனை பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது - இந்த கருத்தடை முறைகள்? (நூறு சதவிகித மாற்று வழியாக இதைக் காணமுடியாது என்பது மருத்துவர்களின் கூற்று.)
ஆண்களுக்குக் கவலையில்லை - அப்படியே போய் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நொடிப்பொழுதில் தொடங்கி விடலாம்.
இன்று நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் போதிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அரசு அதை தனக்கு வசதியாகக் கருதி, பொருளாதார நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு, பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மறைத்து, பிரச்சார யுத்திகளால் தொடர்ந்து பெண்களைத் தாக்கி தன் நோக்கை, இலக்கை அடையத் துடிக்கிறது.
இந்த சூழ்நிலையில், பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ நிரந்தர கருத்தடை செய்வதை மதவாதிகள் எதிர்ப்பது கூட சரியெனவே படுகிறது - அவர்கள் அறிந்தோ, அறியாமாலோ, செய்யக் கூடிய சரியான காரியமாக இருக்கிறது.
அரசு கவனம் செலுத்த வேண்டியது - நிரந்தர கருத்தடை முறைகளையும் அவற்றின் பிரச்சாரத்தையும் கைவிட்டுவிட்டு - தற்காலிக முறைகள், பின்விளைவுகளை ஏற்படுத்தாத மருந்து, மாத்திரை மற்றும் அவற்றிற்கான ஆராய்ச்சிகள், ஆணுறைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தி பிரச்சார முறைகளை அமைக்க வேண்டும்.
கருக்கலைப்பை முற்றிலுமாக பாதுகாப்பானதாக்கி, fly by night operatorகளைத் தடுத்து, முறைப்படுத்த வேண்டும். அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை வடிவமைக்க வேண்டும்.
கருத்தடையின் முழு பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்தும் ஆண்களின் மனோபாவத்தை மாற்றி, கருத்தடையில் பங்கேற்கச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.
இந்த கருத்தடை மற்றும் கருக்கலைப்பு முறைகளை வேறொரு தளத்திலும் விவாதிக்கப்பட வேண்டி வருகின்றது.
அது பாதுகாப்பான உடலுறவு....
குஷ்பு, சுகாசினி போன்றவர்களால் இன்று ஒழுக்ககேட்டை வலியுறுத்துவதற்கு இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்ற முக்காடு தேவைப்பட்டதை தமிழகம் கொதித்து எழுந்து தடுத்து விட்டதென்றாலும் - இந்த ''பாதுகாப்பான உடலுறவு'' என்பதை நாம் கம்பளத்தின் அடியில் தள்ளிப் புதைத்து விட முடியாது.
இன்று எய்ட்ஸ் பெருமளவில் தாக்கி இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதுவே போதுமானது - பாதுகாப்பான உடலுறவு தேவை என்பதை வலியுறுத்த. தன்னை மட்டும் பாதுகாக்க அல்ல, தன் பெண்ணை - மனைவியைப் பாதுகாக்கவும் தான்.
இந்தப் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆண்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்படி பொறுப்பேற்கையிலேயே அதுவும் கூட கருத்தடைக்கான வழிமுறையாக ஆகக்கூடும்.
இனியும் ஆண்கள் எல்லாவித பொறுப்புகளையும் பெண்கள் மீதே சுமத்தி விட்டு, விட்டேத்தியாக சுற்றிவரலாம் என்று நினைத்தால், பின்னர் அதுவே தங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்காக பெண்களைப் போராடத் தூண்டும் - அப்பொழுது பெண்கள் வைக்கும் கோரிக்கைகளில் நிரந்தர கருத்தடை எதிர்ப்பும் பாதுகாப்பான உடலுறவுத் தேவையும் அடக்கி இருக்கும்.
ஆண்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் - கருத்தடை, மற்றும் பாதுகாப்பான உடலுறவிற்கான உத்தரவாதத்திற்கு.
0 Comments:
Post a Comment
<< Home